ரானா படத்தில் காமெடிக்காக கஞ்சா கருப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'சந்திரமுகி' படத்தில் நடிக்க ரஜினியிடம் கேட்ட போது 'நான் நடிப்பது இருக்கட்டும். முதலில் வடிவேலுவிடம் கால்ஷீட் இருக்கா என்று கேளுங்க' என்றார்.
அப்படத்தில் 'மாப்பு... வெச்சுட்டாருய்யா ஆப்பு!' என்ற வசனம் மிகவும் பேசப்பட்டது.
அதன்பின்பு நடித்த குசேலன் படத்திலும் வடிவேலும் இருக்கும் படி பார்த்து கொண்டார்.
எந்திரன் படத்தில் வடிவேலு நடிக்கவில்லை. ஆனால் வடிவேலுவை எங்கு பார்த்தாலும் சரி, பேசினாலும் சரி அன்போடு பேசி நலம் விசாரித்து வந்தார் ரஜினி.
இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வடிவேலுவின் அணுகுமுறையால் பெரும் அதிர்ச்சியுற்றார் ரஜினி. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் படம் 'ரானா'. இப்படத்தில் வடிவேலு வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் ரஜினி.
வடிவேலு இடத்தை இப்பொழுது பிடித்து இருப்பது கஞ்சா கருப்பு. 'எல்லாம் என் பையன் பொறந்த ராசிதான்' என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார் கஞ்சா கருப்பு.
View lots of updates in tamil cinema and latest tamil movie news,actors and actress news here
Thursday, 28 April 2011
வடிவேலுவை கைவிட்ட ரஜினி!
There are no comments posted yet. Be the first one!
Comments by IntenseDebate
Posting anonymously.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment