இதுவரை தான் இயக்கிய படங்களெல்லாம் ஹிட் என்ற தலைக்கனத்தாலோ என்னவோ... ஹீரோ - ஹீரோயின் - காமெடியன் என யாருக்குமே... ஏன் தன்னிடம் பணியாற்றும் அஸிஸ்டெண்ட் டைரக்டரிடம் கூட கதை சொல்ல மறுப்பவர்தான் அந்த ஹரியான டைரக்டர். சூட்டிங் ஸ்பாட்டில் பள்ளிக்கூட ஹெட் மாஸ்டர் போல ஸ்டிரிக்ட்டாக இருக்கும் அவர்ர், அடுத்து இயக்கி வரும் புதிய படத்தில் தமன்னாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். நான் சொன்னதை மட்டும் கேட்டு நடிச்சா போதும்; கதையை கேட்கக் கூடாது என்பது இவரது ராஜ்ஜியத்தில் எழுதப்படாத சட்டம். அவரிடம் கதை கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட ஹீரோக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதுபற்றி அவரிடமே கேட்டால், ஒரு டைரக்டர் தன்னோட ஹீரோவுக்கு கதை சொல்ல மாட்டாரா என்ன? சொல்கிற வரைக்கும் பொறுமையா இருக்க வேண்டியதுதானே என்பதுதான் அவரது தத்துவம்.
இப்படியெல்லாம் கதை சொல்கிற விஷயத்தில் கறார் காட்டிவரும் ஸ்ட்ரிக்ட் டைரக்டர், தனது அடுத்தப்பட நாயகியான தமன்னாவுக்கு சலுகை காட்டியிருக்கிறார். ஒரு மணி நேரம்... இரண்டு மணிநேரமல்ல... மூன் மணி நேரம் தமன்னாவுக்கு கதை சொல்லி திருப்தி படுத்தியிருக்கிறாராம். கறார் டைரக்டர் தமன்னாவுக்கு மட்டும் சலுகை காட்டியிருக்கும் செய்திதான் காட்டுத்தீ போல கோடம்பாக்கம் முழுக்க பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
ஹ்ம்ம்ம்... தமன்னான்னா சும்மாவா?
View lots of updates in tamil cinema and latest tamil movie news,actors and actress news here
Friday, 29 April 2011
தமன்னாவுடன் 3 மணி நேரம்! பத்தி எரியும் கோடம்பாக்கம்!!
There are no comments posted yet. Be the first one!
Comments by IntenseDebate
Posting anonymously.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment