Sunday 24 April 2011

+2 தேர்வு எழுதிய நடிகை காவ்யா

பிரபல நடிகை காவ்யா மாதவன் சிறு வயதிலேயே நடிக்க வந்ததால் நேற்று +2 தேர்வு எழுதியுள்ளார்.
8ம் வகுப்பு படிக்கும்போது நடிகர் திலீப்புடன் ‘ சந்திரன் உதிக்குன்ன திக்கில்‘ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்கு சென்று கொண்டே படத்தில் நடித்து வந்த காவ்யா மாதவன் பின்னர் பள்ளிக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேரம் சினிமாவில் கவனம் செலுத்தினார். இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு திருமணம் நடந்து. திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. தற்போது, அவருடைய விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், காவ்யா மாதவனுக்கு படிப்பின் மீது திடீரென பற்று ஏற்பட்டுள்ளது.

அவர் தேசிய திறந்தவெளி பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 படித்து வருகிறார். அவருக்கு நேற்று தேர்வு தொடங்கியது. முதல் தேர்வான ஆங்கில தேர்வு நேற்று நடந்தது.

எர்ணாகுளம் எடத்தளாவில் உள்ள பள்ளியில் அவர் தேர்வு எழுத வந்தார். தேர்வு முடிந்ததும் காவ்யா மாதவன் யாரிடமும் பேசாமல் வேகமாக காரில் ஏறி வீட்டுக்கு சென்றார். இதனால், மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

No comments:

Post a Comment