Thursday 28 April 2011

நம்பிக்கை இழந்த பரத்

பல வெற்றிப்படங்களில் நடித்த பரத்திற்கு ஒரே நேரத்தில் மூன்று படங்கள் வரிசை கட்டி நிற்கிறதாம்.

இதில் வானம் படம் வெளிவருவதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் யுவன் யுவதி, திருத்தணி ஆகிய இரு படங்களுக்குதான் சிக்கல் இருக்கிறது.

திருத்தணியை முதலில் கொண்டு வந்துவிடலாம் என்கிறார் அப்படத்தின் இயக்குனர் பேரரசு.

ஏனென்றால் வானம் வந்தால் அந்த வெற்றி சூறாவளி காற்று தனது திருத்தணியை அடித்துக் கொண்டு போய்விடும் என்பது இயக்குனர் பேரரசுவின் நம்பிக்கை.

ஆனால் திருத்தணி மீது நம்பிக்கையே இல்லையாம் பரத்திற்கு. அதனால் யுவன் யுவதி முதலில் வரட்டுமே என்கிறார் பரத்.

இருவருக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கும் இவ்விரு படங்களையும் வாங்க ஒரு விநியோகஸ்தர் கூட முன்வரவில்லை என்பதுதான் மிகவும் வருந்ததக்க விடயம்.

No comments:

Post a Comment