Wednesday 4 May 2011

முன் கோபத்தில் சீறிய டாப்சீ

கொலிவுட் படங்களில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் கவனத்தை செலுத்தி வருகிறார் டாப்சீ. தெலுங்கில் இவர் நடித்த 'மிஸ்டர் பெர்பெக்ட்' படத்தில் நடித்துள்ளார்.
இதில் இவரின் நடிப்பை பார்த்தவர்கள் பாராட்டு மழையில் குளிப்பாட்டியுள்ளார்கள்.

தெலுங்கு படநாயகன் பிரபாஸ் உடன் இணைந்து டாப்சீ துடிப்பாக நடித்துள்ளார்.

சினிமாவில் நடிக்க இறங்கிய வேகத்தில் பல வகையான கதாபாத்திரத்தில் தயக்கமின்றி நடிப்பதை நினைத்து பெருமை அடைகிறாராம்.

'மிஸ்டர் பெர்பெக்ட் படத்தில் முன் கோபத்தில் சீறும் நாயகியாக நடித்துள்ளேன். இப்படத்தில் எனது துறுதுறுப்பை காட்டும் வகையிலான வேடிக்கையான கதாபாத்திரத்தில் வருகிறேன்.

நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளேன். தமிழில் நாயகன் ஜீவா உடன் 'வந்தான் வென்றான்' படத்தில் நடித்துள்ளேன்.

கொலிவுட்டில் எனக்கு இது இரண்டாவது படம். இந்த படத்தின் பாடல் காட்சிகளை எடுத்து முடித்த பிறகு படம் வெளியாகும்.

இந்த படம் எனக்கு நிறைய எதிர்பார்ப்பை தந்துள்ளது. எனக்கு 'ஆடுகளத்திற்கு' பிறகு இன்னொரு வெற்றியை தரும் என்று எதிர்ப்பார்க்கிறேன் என்று டாப்சீ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment